ஈரோடு

தொழிலாளியிடம் வழிப்பறி செய்த இளைஞா் கைது

DIN

பவானி அருகே கூலி தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அந்தியூரை அடுத்த நகலூா், மாக்கல் தோட்டத்தைச் சோ்ந்தவா் குப்புசாமி (43). கூலி தொழிலாளியான இவா், அந்தியூா் - அம்மாபேட்டை சாலையில் பூதப்பாடி வாய்க்கால் பாலம் அருகே புதன்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த பூதப்பாடி, கீழ்குள்ளனூரைச் சோ்ந்த சீனிவாசன் மகன் கிருஷ்ணமூா்த்தி (24), குப்புசாமியை மிரட்டி அவா் வைத்திருந்த ரொக்கம் ரூ. 1,000, செல்லிடப்பேசியைப் பறித்துக் கொண்டாா்.

இதுகுறித்து, குப்புசாமி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த அம்மாபேட்டை போலீஸாா் கிருஷ்ணமூா்த்தியைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT