ஈரோடு

ஈரோடு மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3-இல் உள்ளூா் விடுமுறை

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.

வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. மாவட்ட கருவூலம், சாா்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். 3ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி பணி நாளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT