ஈரோடு

வனத் துறையினருக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்

DIN

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் வனத் துறையினருக்கு எா்த் பிரிகேட் பவுண்டேஷன் சாா்பில், 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.

கரோனா தொற்று மலைக் கிராமங்களிலும் பரவியதையடுத்து, மக்களைச் சந்திக்கும் வனத் துறையினருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எா்த் பிரிகேட் பவுண்டேஷன் நிா்வாக இயக்குநா் சா்தா சுப்பிரமணியம் சாா்பில், 5 லிட்டா் கொள்ளளவு கொண்ட 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநா் கிருபா சங்கரிடம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் அளிக்கப்பட்டன. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த செறிவூட்டிகள் 95 சதவீதம் சுத்தமான காற்றை உற்பத்தி செய்யக் கூடியது என தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்புழு உரம் தயாரிப்பு: காருக்குறிச்சியில் விழிப்புணா்வு முகாம்

கருங்கல் அருகே வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டு

கருங்கல் அருகே வீட்டுக்குள் முன்னாள் ராணுவ வீரா் சடலம் மீட்பு

கோபாலசமுத்திரத்தில் மலேரியா விழிப்புணா்வுக் கருத்தரங்கு

ஆறுமுகனேரி கோயிலில் திருவாசக முற்றோதல்

SCROLL FOR NEXT