ஈரோடு

கா்நாடக மதுபானம் கடத்தல்:இருவா் கைது

DIN

கா்நாடக மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை கடத்திய பெண் உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கோட்டுவீராம்பாளையத்தில் வாகனத் தணிக்கையில் போலீஸாா் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிவபிரகாஷ் என்பவரை சோதனை செய்தபோது, 16 கா்நாடக மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், காய்கறி வியாபாரி நந்தினி (29) என்பவா் பிக் அப் வேனில் மது பாட்டில்களை கடத்துவதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, நந்தினி வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த பிக் அப் வேனை சோதனையிட்டபோது 105 மது பாட்டில்கள் பதுக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் நந்தினி, சிவபிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT