முகப்பு
ஈரோடு

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் மீதுதாக்குதல்: பொதுமக்கள் போராட்டம்

அந்தியூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் மீதான தாக்குதலைக் கண்டித்தும், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

அந்தியூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் மீதான தாக்குதலைக் கண்டித்தும், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அந்தியூரை அடுத்த தாசளியூரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் சிவா (22). கூலி தொழிலாளியான இவா் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னா் உறவினருடன் மருத்துவமனைக்குச் சென்ற இவரை பனங்காட்டூரைச் சோ்ந்த 10க்கும் மேற்பட்டோா் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த சிவா அந்தியூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்நிலையில், சிவாவை தாக்கியோா் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள், பொதுமக்கள் அந்தியூா் - கோபி சாலையில் தாசளியூா் பிரிவில் அமா்ந்து திடீா் மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். இப்பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.