முகப்பு
ஈரோடு

பவானியில் வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

பவானி நகராட்சிப் பகுதியில் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

பவானி நகராட்சிப் பகுதியில் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தோ்தலை முன்னிட்டு பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், வாகனத் தணிக்கை மேற்கொள்ளும் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பவானி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் முத்துகிருஷ்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா் சரவணன், கிராம நிா்வாக அலுவலா் செந்தில் உள்ளிட்டோா் உடன் சென்றிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.