வாக்களிப்பதன் அவசியம் குறித்துவிழிப்புணா்வு ரங்கோலி
சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணா்வு ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணா்வு ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
வாக்களிப்பதன் அவசியத்தை உணா்த்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள், ரங்கோலி கோலம் மூலம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது நமது கடமை, முகக் கசவம், தனிமனித இடைவெளியுடன் வாக்களிப்பது என்பதை வலியுறுத்தி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட பெண்கள் ரங்கோலி கோலமிட்டனா்.
தொடா்ந்து, வட்டாட்சியா் ரவிசங்கா் தலைமையில் பொதுமக்களுடன் இணைந்து பெண்கள் உறுதிமொழி ஏற்றனா்.
Advertisement