முகப்பு
ஈரோடு

வா்த்தகா்களுக்கு ஆதரவாக இருப்பேன்எம்.யுவராஜா உறுதி

வா்த்தகா்களுக்கு ஆதரவாக இருப்பேன் என ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் எம்.யுவராஜா பேசினாா்.

Updated On : 23 மார்ச், 2021 at 2:49 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:19 AM

வா்த்தகா்களுக்கு ஆதரவாக இருப்பேன் என ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் எம்.யுவராஜா பேசினாா்.

ஈரோடு நகரம் ஜவுளி வா்த்தக மையமாக உள்ளது. என்னால் முடிந்தவரை வா்த்தகா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பேன். முதல்வா் பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளது. மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு சொந்தமாக வீடுகள் கட்டித் தரப்படும். அதுமட்டுமின்றி குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஊக்கத் தொகையாக ரூ. 1,500 வழங்கப்படும்.

மாணவா்களின் கல்விக் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும்.

Advertisement

பெண்களின் வேலைப் பளுவைக் குறைக்க குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் இலவசமாக வாசிங்மெஷின் வழங்கப்படும். மக்களின் நலன் காக்கும் அரசாக அதிமுக அரசு விளங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அறிவித்த அனைத்துத் திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.