ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கரோனா நிவாரணம் 50 சதவீதம் விநியோகம்

DIN

ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களில் 50 சதவீத குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு ரூ. 4 ஆயிரம் கரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் எனவும், முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் மே மாதத்தில் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, மே 15ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகள் மூலம் நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு 12 மணி வரையில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, மாவட்ட வழங்கல் அலுவலா் இலாகி ஜான் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் 7,24,155 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா முதல் தவணைத் தொகை ரூ. 142.78 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில், 3,27,355 அட்டைகளுக்கு கடந்த நான்கு நாள்களில் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. பாக்கியுள்ள குடும்ப அட்டைகளுக்கு நிவாரண நிதி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT