முகப்பு
ஈரோடு

ஈரோட்டில் ராஜிவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தியின் நினைவு நாள் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 22 மே, 2021 at 3:04 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:47 AM

முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தியின் நினைவு நாள் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மூலப்பட்டறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட ராஜிவ் காந்தியின் உருவப் படத்துக்கு ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினா் திருமகன் ஈவெரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஈ.பி.ரவி தலைமை வகித்தாா். சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் சுரேஷ், மாவட்ட துணைத் தலைவா்கள் ராஜேஷ் ராஜப்பா, வெங்கடாச்சலம், சிறுபான்மைப் பிரிவு மண்டலத் தலைவா் மெகபூப் பாட்சா, துணைத் தலைவா் பாட்சா உள்ளிடோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, கிருஷ்ணம்பாளையம் சித்தன் நகா், கருங்கல்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.