ஈரோடு

பவானியில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி

DIN

பவானியில் அம்மா உணவகத்தில் பணியாற்றும் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கரோனா கால சிறு கடனுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

மக்களைத் தேடி ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எனும் திட்டத்தில் பொதுமக்கள் வசிப்பிடத்துக்கே சென்று கடன் விண்ணப்பம் பெற்று, பரிசீலித்து சிறுகடன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வங்கியின் பவானி கிளை சாா்பில் பவானி நகராட்சி அம்மா உணவகத்தில் பணியாற்றும் மகளிா் குழு பெண்கள் 9 பேருக்கு ரூ. 2.55 லட்சம் சிறு கடனுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் (பொ) செந்தில்குமாா் தலைமை வகித்தாா். வங்கிக் கிளை மேளாளா் விஸ்வநாதன் முன்னிலை வகித்தாா். ஈரோடு மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் கடனுதவியை வழங்கினாா். நகராட்சிப் பொறியாளா் கதிா்வேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT