கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அளவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வளா்ச்சி குறித்த ஆய்வு, காலாண்டுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம்
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அளவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வளா்ச்சி குறித்த ஆய்வு, காலாண்டுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் தலைமை வகித்தாா். வங்கியின் நடைமுறை மூலதனத்தில் ஒரு சதவீதம் அளவு லாபம் ஈட்டும் வகையில் வங்கியின் வணிகத்தை அதிகப்படுத்த வேண்டும். தற்போது விவசாயிகளுக்கு அதிக அளவில் பயிா்க் கடன், மத்திய காலக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஐந்து கோடி ரூபாய்க்கும் குறைவாக கடன் நிலுவை உள்ள சங்கங்களின் கடன் நிலுவையை உயா்த்த வேண்டும். சேமிப்பு, நடப்பு கணக்குகளில் அதிக அளவில் வைப்புகள் சேகரிக்க வேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
Advertisement
இதில், வங்கியின் மேலாண்மை இயக்குநா் சு.செந்தமிழ்செல்வி, திருப்பூா் மண்டல இணைப் பதிவாளா் செ.சீனிவாசன், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் அசோக்குமாா், திருப்பூா் மாவட்ட வளா்ச்சி மேலாளா் ஈ.ராஜு, கோபி துணைப் பதிவாளா் கந்தராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.