பிகார் துணை முதல்வர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
பிகாரின் துணை முதல்வர்கள் விஜய் குமார் சௌத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகாரின் துணை முதல்வர்கள் விஜய் குமார் சௌத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில உள்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, இரு துணை முதல்வர்களுக்கும் இனி இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும். இசட் பிரிவு பாதுகாப்பில், நவீன ஆயுதங்கள் ஏந்திய பயிற்சி பெற்ற வீரர்கள் அடங்கிய ஒரு சிறப்பு குழு இடம்பெற்றிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சௌத்ரி, யாதவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை துறை ஆய்வு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்னதாக இசட்-பிளஸ் பாதுகாப்பைப் பெற்று வந்த மூத்த பாஜக தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான விஜய் குமார் பாதுகாப்பை அரசு குறைத்துள்ளது.
Advertisement
Advertisement
இதேபோல் நிதீஷ் குமாரின் மகனும் ஜேடி(யு) தலைவருமான நிஷாந்த் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி அரசு வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அதேசமயம் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள பிகாரின் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமாருக்கு மாநில அரசு அண்மையில் இசட்-பிளஸ் பாதுகாப்பு வழங்கியது.
இசட்-பிளஸ் என்பது அரசால் வழங்கப்படும் மிக உயரிய பாதுகாப்பு என்று அந்த அதிகாரி கூறினார். பிகாரின் முதல்வராக சாம்ராட் சௌதரி கடந்த ஏப்.15ஆம் தேதி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
The Bihar government has heightened security arrangements for Deputy Chief Ministers Vijay Kumar Choudhary and Bijendra Prasad Yadav, officials said on Saturday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.