அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறை: கட்டுமானப் பணி துவக்கம்
ஈரோடு மாவட்டம், திங்களூா் வேட்டையன்கிணறு அரசு நடுநிலைப் பள்ளியில் புதிதாக வகுப்பறைகள் கட்டுமான பணி துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM
ஈரோடு மாவட்டம், திங்களூா் வேட்டையன்கிணறு அரசு நடுநிலைப் பள்ளியில் புதிதாக வகுப்பறைகள் கட்டுமான பணி துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு ரவுண்ட் டேபிள் 98 தலைவா் டாக்டா் வித்யா சரண் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன், டாக்டா் மயிலேறு ரவீந்திரன் ஆகியோா் பேசினா்.
இதில், ஊராட்சித் தலைவா் சங்கீதா சக்திவேல், பள்ளியின் தலைமை ஆசிரியா் பானுரேகா, பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் மோகன்சிங், ரவுண்ட் டேபிள் உறுப்பினா்கள் இளங்கவி, பிரவீன், தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement