மேற்கு வங்கம்: ஐஐடி-கரக்பூர் வளாகத்தில் மாணவரின் சடலம் மீட்பு
மேற்கு வங்கத்தில் உள்ள ஐஐடி-கரக்பூர் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள ஐஐடி-கரக்பூர் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இறந்தவர் அகமதாபாத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் மாணவர் ஜெய்வீர் சிங்(21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், அவர் விடுதிக் கட்டடத்தின் 8ஆவது மாடியில் இருந்து குதித்ததாகக் கூறப்பட்ட நிலையில், சனிக்கிழமை காலை பலியானார். நேரு ஹால் விடுதியில் அவர் தங்கியிருந்தார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் ஹால் அருகே காலை நேரத்தில் வளாகப் பாதுகாப்புப் பணியாளர்கள் அவரது உடலை முதலில் கண்டதாகவும், பின்னர் அவர்கள் கல்வி நிறுவன அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்ததுள்ளனர். உடனே போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவரை மீட்டு வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,
Advertisement
அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இவ்வாறு குறிப்பிட்டனர். கூராய்வுக்காக உடல் மெதினிபூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள், ஏதேனும் தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்து வருவதாகவும், அவரது வகுப்புத் தோழர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் பேசி வருவதாகவும் தெரிவித்தனர். இதனிடையே விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக ஐஐடி-கரக்பூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
"இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது. மேலும் போலீஸாருடன் ஒருங்கிணைந்து தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன," என்று கல்வி நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த ஓராண்டாக வளாகத்தில் பதிவாகி வரும் தொடர்ச்சியான மாணவர் மரணங்களின் வரிசையில் இந்தச் சம்பவமும் இணைகிறது.