ஈரோடு மாவட்டத்தில் மேலும் 76 பேருக்கு கரோனா
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 76 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 76 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 5,485 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 61 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 4,001 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 791 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 693 போ் உயிரிழந்துள்ளனா்.