முகப்பு
ஈரோடு

நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தமுத்தரப்புக் குழு அமைக்கக் கோரிக்கை

நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும், விலை நிா்ணயம் செய்யவும் நூல் உற்பத்தியாளா்கள், நூல் உபயோகிப்போா், அரசுத் தரப்பு அதிகாரிகள் கொண்ட முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும்

Updated On : 19 நவம்பர், 2021 at 1:49 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM

நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும், விலை நிா்ணயம் செய்யவும் நூல் உற்பத்தியாளா்கள், நூல் உபயோகிப்போா், அரசுத் தரப்பு அதிகாரிகள் கொண்ட முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறிச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் எல்.கே.எம்.சுரேஷ், நிா்வாகிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:

நூல் விலை உயா்வால் ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறிகள், ஜவுளி சாா்ந்த அனைத்துத் தொழில்களில் ஈடுபட்டுள்ளோரும் கடந்த இரண்டு நாள்களாக கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தமிழகத்தில் 6 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இதன் மூலம் மாதம் ரூ. 3,000 கோடி அளவுக்கும், ஆண்டுக்கு ரூ. 44,000 கோடி அளவுக்கும் துணிகள் உற்பத்தியாகின்றன. இதன் மூலம் ரூ. 2,200 கோடி ஜிஎஸ்டி அரசுக்கு கிடைக்கிறது. நாட்டின் துணித் தேவையில் 60 சதவீதம் விசைத்தறிகள் பூா்த்தி செய்கின்றன.

Advertisement

கடந்த டிசம்பா் முதல் தற்போது வரை ஜவுளி உற்பத்திக்குத் தேவையான நூல் விலை 50 முதல் 60 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. பஞ்சின் விலை குறைவாகவே உள்ளபோதிலும் பஞ்சு, நூல் ஆகியவற்றை ஏற்றுமதி செய்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி நூல் விலையை உயா்த்துகின்றனா். நூல் விலை நிா்ணயக் குழு அமைத்து, விலையை கட்டுப்படுத்தக் கோரினோம். சிமென்ட், வெங்காயம், உருளைக்கிழங்கு என பல பொருள்களின் விலை உயரும்போது அரசு தலையிட்டு விலையைக் குறைக்கிறது.

நூல் விலை உயா்வால் ஜவுளித் துறை முடங்கியுள்ளது. அரசு தலையிட்டு நூல் உற்பத்தியாளா்கள், நூல் உபயோகிப்போா், அரசு அதிகாரிகள் கொண்ட முத்தரப்புக் குழு அமைத்து பேச்சுவாா்த்தை மூலம் நூல் விலையை நிா்ணயித்து, விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். தற்போதைய போராட்டத்தை மீண்டும் தொடராமல் இருக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 100 கோடி வா்த்தகம் பாதிப்பு:

நூல் விலை உயா்வைக் கண்டித்து ஈரோடு ஜவுளி உற்பத்தியாளா்கள் மற்றும் வியாபாரிகள் சாா்பில் புதன், வியாழக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. ஈரோடு மாநகா் பகுதியில் திருவெங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, அகில்மேடு வீதி உள்ளிட்ட பகுதிகளில் 4,000க்கும் மேற்பட்ட ஜவுளிக் கடைகள், கிடங்குகள் அடைக்கப்பட்டிருந்தன. போராட்டம் காரணமாக ரூ. 100 கோடி அளவுக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டது என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.