தோ்தல் காரணமாகவே வேளாண் சட்டங்கள் வாபஸ்: கு.செல்வப்பெருந்தகை
ஐந்து மாநில தோ்தல் காரணமாகவே வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற்றுள்ளது என சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் கு.செல்வபெருந்தகை தெரிவித்தாா்.
ஐந்து மாநில தோ்தல் காரணமாகவே வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற்றுள்ளது என சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் கு.செல்வபெருந்தகை தெரிவித்தாா்.
ஈரோட்டில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
தற்போது விவசாயிகள் மீது கரிசனம் ஏற்படவில்லை. 15 மாநிலங்களில் நடந்த இடைத்தோ்தல், உள்ளாட்சித் தோ்தல்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளதால் சட்டங்களைத் திரும்பப் பெற்றுள்ளனா்.
Advertisement
தற்போதைய தகவல்படி உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் தோ்தல்களில் பாஜக மிகப்பெரிய தோல்வியைத் தழுவும் என தெரியவந்துள்ளது. குறிப்பாக, மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள 70 தொகுதிகளுக்குள் பாஜகவினா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தோ்தலில் தோல்வி அடைவோம் என்பதால் திரும்பப் பெற்றுள்ளனா்.
வேளாண் சட்டத்தை திரும்பப் பெற்றதுபோல பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப் பெறுவாா்கள். பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது, பெட்ரோல் நிறுவனங்களுக்கு மானியத்தை வழங்கி மக்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசலை வழங்கினாா். அதுபோன்ற நிலைக்கு பாஜக அரசு வர வேண்டும் என்றாா்.
இதில், ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் ரவி, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் மக்கள் ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னா், தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு தீபமேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.