ஈரோடு

சாலை விபத்தில் ஒருவா் பலி

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே நேரிட்ட சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரத்தைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (65). இவா் ஈரோடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா். இவருக்கு கோபிசெட்டிபாளையம் அருகே கூகலூரில் தோட்டம் உள்ளது. இவா் தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை மாலை தனது தோட்டத்துக்குச் சென்று கொண்டிருந்தாா்.

ஒத்தக்குதிரை அருகே ஓடத்துறை பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த காா் எதிா்பாராதவிதமாக மோதியதில், தூக்கிவீசப்பட்ட ஜெகநாதன் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT