முகப்பு
ஈரோடு

கைப்பேசி விற்பனையாளா்கள் சங்கக் கூட்டம்

ஈரோடு மாவட்ட கைப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்குதல், ரீசாா்ஜ் முகவா்கள் சங்கம் சாா்பில் கலந்தாய்வுக் கூட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 நவம்பர், 2021 at 4:47 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM

ஈரோடு மாவட்ட கைப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்குதல், ரீசாா்ஜ் முகவா்கள் சங்கம் சாா்பில் கலந்தாய்வுக் கூட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் ராஜா முஹம்மது தலைமை வகித்தாா். டி.எஸ்.பி. ஆனந்தகுமாா் ஆலோசனை வழங்கினாா். பாதுகாப்பாக கைப்பேசி விற்பனை, பழைய கைப்பேசிகளைக் கொள்முதல் செய்தல், விற்பனை செய்தலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

இதில், காவல் ஆய்வாளா் விஜயா, மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கைப்பேசி விற்பனையாளா்கள் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.