காதலிக்க நேரமில்லை: மிருணாள் தாக்குர்
மிருணாள் தாக்குர் காதல் குறித்து பேசியுள்ளார்...
நடிகை மிருணாள் தாக்குர் காதல் குறித்து மனம் திறந்துள்ளார்.
நடிகை மிருணாள் தாக்குர் பிரபலமான நடிகையென்பதால் எப்போதும் அவரைச் சுற்றி காதல் கிசுகிசுக்கள் இருந்துகொண்டே இருக்கின்றன.
அண்மை காலமாக, நடிகர் தனுஷும் மிருணாளும் காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் வதந்திகள் பரவின. இதுகுறித்து, இருவருமே பதில் சொல்லாமல் இருந்தது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
Advertisement
தற்போது, டக்காய்ட் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம், இதுவரை ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற மிருணாளிடம் காதல் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இப்போது காதலிக்க நேரமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ”எனக்கு நல்ல சம்பளம் கொடுக்க முன்வந்தாலும் நான் சில கதைகளை வேண்டாம் என்று நிராகரித்து விடுவேன். நல்ல கதாபாத்திரங்களையே முக்கியமென நினைக்கிறேன். சீதா ராமம் படத்தில் சீதா மகாலட்சுமி, ஹாய் நானாவில் யஷ்னா ஆகியவை என் திரைப்பயணத்தில் மைல்கல்கள். அப்படிப்பட்ட, கதாபாத்திரங்களில் நடிப்பதற்காகவே காத்திருக்கிறேன்” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.