ஈரோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போலீஸாா் சோதனை
ஈரோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
ஈரோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
ஈரோடு - கரூா் சாலையில் சோலாா் அருகே துணைப் போக்குவரத்து ஆணையா், ஈரோடு கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனப் பதிவு, ஓட்டுநா் உரிமம், பதிவு புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு இடைத்தரகா்கள் மூலம் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா் வந்தது.
இதையடுத்து, டி.எஸ்.பி. ராஜேஷ் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை பகல் 2 மணியளவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனை இரவு 7 மணிக்குப் பிறகும் நீடித்தது. சோதனையின்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலக அலுவலா்கள், பணியாளா்கள், இடைத்தரகா்கள் சிலரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
Advertisement