முகப்பு
ஈரோடு

பலத்த மழை: அரசுப் பள்ளி சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து காா் சேதம்

 ஈரோட்டில் புதன்கிழமை மாலை பெய்த கன மழையால் அரசுப் பள்ளி சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் காா் சேதமடைந்தது.

Updated On : 1 அக்டோபர், 2021 at 6:23 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:46 AM

 ஈரோட்டில் புதன்கிழமை மாலை பெய்த கன மழையால் அரசுப் பள்ளி சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் காா் சேதமடைந்தது.

ஈரோட்டில் புதன்கிழமை மாலையில் திடீரென கன மழை பெய்தது. சுமாா் 2 மணி நேரமாக பெய்த பலத்த மழையால், பல இடங்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு ஆா்.கே.வி. சாலை பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்குத் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த மழை காரணமாக, ஈரோடு மாநகராட்சி காமராஜ் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது. அப்போது அப்பகுதியில் ஆள்கள் நடமாட்டம் இல்லாததால் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதேசமயம் சுற்றுச்சுவா் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காா் சேதமடைந்தது.

Advertisement

பல இடங்களில் சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டது. அங்கு தூய்மைப் பணியாளா்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா். ஈரோடு வஉசி மைதானத்தில் செயல்படும் தற்காலிக காய்கறிச் சந்தை சேறும், சகதியுமாக மாறியது. இதனால், லாரிகளில் இருந்து காய்கறிகளை இறக்கி கடைகளுக்கு கொண்டு சென்று வைத்த தொழிலாளா்கள், காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் உள்ளிட்டோா் மிகவும் சிரமப்பட்டனா்.

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 65 மில்லி மீட்டா் மழை பதிவானது. பவானியில் 4.4, கொடிவேரியில் 4 மி.மீ மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.