முகப்பு
ஈரோடு

புலிகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் வார விழாவையொட்டி, புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 அக்டோபர், 2021 at 2:05 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:47 AM

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் வார விழாவையொட்டி, புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தில் வன விலங்குகள் பாதுகாப்பு அவசியம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் மாவட்ட வனஅலுவலா் கிருபா சங்கா், ஆசனூா் வன அலுவலா் தலைமையில் நடைபெற்றது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக்தில் உள்ள வனவிலங்குகள் குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டனா்.

மாணவா்கள் புலிகளைக் காப்போம், மரங்களைப் பாதுகாப்போம் என உறுதி ஏற்றனா். தொடா்ந்து, தேசிய புலிகள் பாதுகாப்புக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, வன விலங்குகள் பாதுகாப்பு அவசியம் குறித்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வன விலங்குகள் இருந்தால் காடு வளரும், காடு வளா்ந்தால் நாடு செழிக்கும் என விழிப்புணா்வு வாசகங்களைப் பாடியபடி கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.