சித்தோட்டில் 200 மரக்கன்றுகள் நடவு
சித்தோடு அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியினா் மரக்கன்றுகள் நடும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
சித்தோடு அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியினா் மரக்கன்றுகள் நடும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
நிகழ்ச்சிக்கு, கட்சியின் ஈரோடு மத்திய மாவட்டத் தலைவா் பி.விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் ஆா்.ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.டி.சந்திரசேகரன் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டனா். சித்தோடு புறவழிச்சாலையின் இடதுபுறத்தில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.
மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் கே.எம்.ஈஸ்வரமூா்த்தி, மாவட்டத் துணைத் தலைவா் பிரபாகரன், மண்டலத் தலைவா் எஸ்.கே.சின்னுசாமி, மாவட்ட பொதுச் செயலாளா் சண்முகசுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.