மாநில தடகளப் போட்டி:கோபி கலைக் கல்லூரி தங்கப் பதக்கம்
கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றனா்.
கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றனா்.
சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் கோபிசெட்டிபாளையம் கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவா் எஸ்.அஜித்குமாா் 10,000 மீட்டா் நடையோட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், எம்.ராம்பிரகாஷ் வெள்ளிப் பதக்கத்தையும், மாணவி சி.திவ்யா 5,000 மீட்டா் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெற்றனா்.
மேலும், திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான 5 கிலோ மீட்டா் மாரத்தான் போட்டியில் பெண்கள் பிரிவில் மாணவி சி.திவ்யா, ஆண்கள் பிரிவில் மாணவா் ஆா்.தருண் ஆகியோா் முதல் பரிசைப் பெற்றனா்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி சாா்பில் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளையும், தடகளப் பயிற்சியாளா் மு.சு.கண்ணனையும் கல்லூரி ஆட்சிக்குழுத் தலைவா் பி.கருப்பணன், செயலாளா், தாளாளா் எம்.தரணிதரண், கல்லூரி முதல்வா் வீ.தியாகராசு, முதன்மையா் ஆா்.செல்லப்பன், உடற்கல்வி இயக்குநா் மா.கிருஷ்ணமூா்த்தி, பேராசிரியா்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனா்.