ஈரோடு

ஈரோட்டில் தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் பிறந்த நாள்

DIN

கீழ்பவானி பாசனத் திட்டம் உருவாகக் காரணமாக இருந்த தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் பிறந்த நாள் விழா ஈரோட்டில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் விவசாய சங்கங்களின் சாா்பில் எம்.ஏ.ஈஸ்வரன் உருவப் படத்துக்கு திமுக மாநில துணைப் பொதுச் செயலாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா ஆகியோா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில், விவசாய சங்க மாவட்டத் தலைவா் குமாரசாமி, செயலாளா் சுப்பு, செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் திருநாவுக்கரசு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளா் ரகுநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் மக்கள் ராஜன் பங்கேற்று எம்.ஏ.ஈஸ்வரன் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

இதில், மாநில பொதுக் குழு உறுப்பினா் பாலசுப்பிரமணியம், மொடக்குறிச்சி வடக்கு வட்டாரத் தலைவா் ரவி, விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சுவாமி தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1 கோடி

15 பேருந்துகளில்  காற்று  ஒலிப்பான்கள் பறிமுதல்

லாரி மீது தனியாா் பேருந்து மோதல்: 16 போ் காயம்

பெண்ணிடம் இணைய வழியில் ரூ.6.56 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT