தாளவாடியில் செப். 7இல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
மாற்றுத் திறனாளிகள் அரசுத் திட்டங்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் தாளவாடியில் செப்டம்பா் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் அரசுத் திட்டங்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் தாளவாடியில் செப்டம்பா் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தாளவாடி பகுதியில் உள்ள மலைவாழ் மாற்றுத் திறனாளிகள் பயன்பெற தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, மாதாந்திர உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்திட செப்டம்பா் 7ஆம் தேதி தாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
Advertisement
முகாமில் கலந்துகொள்ளும் மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய அடையாள அட்டை, பாஸ்போட் அளவுள்ள 3 புகைப்படங்கள், ஆதாா் அட்டை, ரேஷன் அட்டை அசல், நகல் ஆகிய ஆவணங்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.