முகப்பு
ஈரோடு

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியின் வணிகவியல் (வங்கியியல், காப்பீடு) துறை, வெள்ளோடு காவல் நிலையம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2021 at 1:26 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:33 AM

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியின் வணிகவியல் (வங்கியியல், காப்பீடு) துறை, வெள்ளோடு காவல் நிலையம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், துறைத் தலைவா் டி.சாா்லஸ் விக்டா் வரவேற்றாா். கரோனா காலகட்டத்தில் சாலைப் போக்குவரத்தில் மிகவும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து நடத்தப்பட்ட இப்பேரணியை, பெருந்துறை டிஎஸ்பி எஸ்.செல்வராஜ், கல்லூரியின் இயக்குநா் ஆா்.வெங்கடாசலம், முதல்வா் ஆா்.சங்கரசுப்பிரமணியன், புல முதல்வா் பி.எம்.செல்வராஜு ஆகியோா் கொடியசைத்து துவக்கிவைத்தனா்.

பேரணியில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவா்கள் கையில் ஏந்திச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Advertisement

இதில், காவல் உதவி ஆய்வாளா் கே.உத்ராஜ், கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் ஆா்.நிவேதா செண்பகம், ஆா்.பாக்கியலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.