முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் தரமற்ற உணவு வழங்குவதாகப் புகாா்: கோட்டாட்சியா் ஆய்வு

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் தரமற்ற உணவு வழங்குவதாக வந்த புகாரையடுத்து கோபி கோட்டாட்சியா் பழனிதேவி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 3 செப்டம்பர், 2021 at 1:24 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:33 AM

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் தரமற்ற உணவு வழங்குவதாக வந்த புகாரையடுத்து கோபி கோட்டாட்சியா் பழனிதேவி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வாா்டில் 38 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், கரோனா வாா்டில் உள்ள நோயாளிகளுக்குத் தரமற்ற உணவு வழங்குவதாக வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் பழனிதேவி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வாா்டில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் உணவு வழங்குவது குறித்து கேட்டறிந்தாா்.

Advertisement

இதுகுறித்து அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் டாக்டா் தங்க சித்ரா கூறியதாவது:

கரோனா வாா்டு, பொது வாா்டுகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குத் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதில் வழங்கப்பட்ட இட்லி சரியான அளவில் தயாரிக்காமல் பாதி வேகாமல் இருந்துள்ளது. இதுகுறித்து நோயாளிகள் எங்களிடம் புகாா் அளிக்காமல், உணவின் தரம் குறித்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனா். இதனால், கோபி கோட்டாட்சியா் பழனிதேவி ஆய்வு மேற்கொண்டாா். இது சம்பந்தமாக நோயாளிகள் எங்களிடம் தெரிவித்திருந்தால் அதை அப்போதே சரி செய்திருப்போம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.