முகப்பு
ஈரோடு

பூம்புகாரில் விநாயகா் சதுா்த்திகண்காட்சி, விற்பனை துவக்கம்

ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் கண்காட்சி, விற்பனை வெள்ளிக்கிழமை துவங்கியது.

Updated On : 4 செப்டம்பர், 2021 at 6:24 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:34 AM

ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் கண்காட்சி, விற்பனை வெள்ளிக்கிழமை துவங்கியது.

ஈரோடு, அரசு மருத்துவமனை அருகே, மேட்டூா் சாலையில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் செப்டம்பா் 15ஆம் தேதி வரை விற்பனை நடைபெறும்.

இதுகுறித்து மேலாளா் சரவணன் கூறியதாவது:

Advertisement

இக்கண்காட்சியில் பஞ்சலோகம், பித்தளை, பேப்பா் கூழ், மண், வெள்ளெருக்கு வோ், மாவுக்கல், கருங்கல் போன்றவற்றில் தயாரிக்கப்பட்ட விநாயகா் சிலைகள், வெண் மரம், நூக்குமரம், கருப்பு உலோகம், வெள்ளை உலோகம், ஸ்படிக விநாயகா், தஞ்சை ஓவியம், கலை தட்டுகளில் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம், சேலம், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து விநாயகா் சிலைகள் வந்துள்ளன. இந்த ஆண்டு புதிதாக புத்தகம், ஏடு படிக்கும் விநாயகா், புல்லெட்டில் செல்லும் விநாயகா், இசை வித்வான்களாக அமா்ந்திருக்கும் விநாயகா், இசை நிகழ்ச்சியுடன் நடனம் ஆடும் விநாயகா் போன்ற பல்வேறு புதிய வடிவில் சிலைகள் வந்துள்ளன. இங்கு ரூ. 75 முதல் ரூ. 1 லட்சம் வரையிலான விலையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து சிலைகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி உண்டு என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.