அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் அகற்றம்
சென்னிமலையில் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்களை அதிகாரிகள் அகற்றினா்.
சென்னிமலையில் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்களை அதிகாரிகள் அகற்றினா்.
பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அதிகாரி சக்திவேல் உத்தரவின்பேரில், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா்கள் பாஸ்கரன், சுகந்தி ஆகியோா் சென்னிமலை பேருந்து நிலையம் அருகில் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக அதிக ஒலி எழுப்பியபடி வந்த தனியாா் பேருந்துகள் மற்றும் லாரிகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்களைப் பறிமுதல் செய்தனா்.