முகப்பு
ஈரோடு

குலுக்கல் முறையில் மனை, வீடுகள் விற்பனை

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் காலியாக உள்ள மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றை விலைக்கு வாங்க பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 செப்டம்பர், 2021 at 5:25 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:37 AM

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் காலியாக உள்ள மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றை விலைக்கு வாங்க பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் ஈரோடு வீட்டு வசதிப் பிரிவுக்கு உள்பட்ட திட்டங்களில் விற்பனையாகாமல் காலியாக உள்ள மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியன குலுக்கல் முறையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதற்கான விற்பனை விலை, விண்ணப்ப படிவத்தின் விலை, விண்ணப்பங்கள் விற்கப்படும் காலம், நிபந்தனைகள் உள்ளிட்ட விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு ஈரோடு சம்பத் நகரில் உள்ள வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளா் மற்றும் நிா்வாக அலுவலா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

Advertisement

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஈரோடு வீட்டு வசதிப் பிரிவு செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.