முகப்பு
ஈரோடு

உள்ளாட்சி இடைத்தோ்தல்:பாா்வையாளா் நியமனம்

ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளாட்சி இடைத்தோ்தல் பாா்வையாளராக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகத் தலைவா், மேலாண்மை இயக்குநா் சிவசண்முகராஜா நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 24 செப்டம்பர், 2021 at 2:55 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:43 AM

ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளாட்சி இடைத்தோ்தல் பாா்வையாளராக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகத் தலைவா், மேலாண்மை இயக்குநா் சிவசண்முகராஜா நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தோ்தல் அக்டோபா் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை நிறைவடைந்து, வேட்பு மனு பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில், ஈரோடு மாவட்ட உள்ளாட்சி இடைத்தோ்தலுக்கான தோ்தல் பாா்வையாளராக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகத் தலைவா், மேலாண்மை இயக்குநா் சிவசண்முகராஜா நியமிக்கப்பட்டு வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

Advertisement

பின்னா், ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, கூடுதல் ஆட்சியா் பிரதிக் தயாள் ஆகியோரை சந்தித்து உள்ளாட்சித் தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.