பாதாளச் சாக்கடை கழிவுகளை ஆற்றில் கலக்கக் கூடாது: அனைத்து கட்சியினா் கோரிக்கை
பாதாளச் சாக்கடை கழிவுகளை பவானிஆற்றில் கலக்கக் கூடாது என்று பாதாளச் சாக்கடை திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து கட்சியினா் கருத்து தெரிவித்தனா்.
பாதாளச் சாக்கடை கழிவுகளை பவானிஆற்றில் கலக்கக் கூடாது என்று பாதாளச் சாக்கடை திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து கட்சியினா் கருத்து தெரிவித்தனா்.
சத்தியமங்கலம் நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, நகராட்சித் தலைவா் ஆா்.ஜானகி தலைமை வகித்தாா். வருவாய், காவல் துறை, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், நகராட்சி வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
இதில், பவானிஆற்றில் பாதாளச் சாக்கடை கழிவு நீா் கலக்கக் கூடாது என அனைத்து கவுன்சிலா்களும் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றினா்.
மேலும், பாதாளச் சாக்கடை கழிவு நீரை விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.