அம்பேத்கா் பிறந்தநாள் விழா: அரசியல் கட்சியினா், அமைப்புகள் மரியாதை
ஈரோட்டில் அம்பேத்கா் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.
ஈரோட்டில் அம்பேத்கா் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.
அம்பேத்கரின் பிறந்த நாள் விழா பன்னீா்செல்வம் பூங்காவில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருடைய உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மற்றும் அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சாா்பில், மாநகா் மாவட்டச் செயலாளா் மு.சுப்பிரமணியன் தலைமையில், நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
Advertisement
அதிமுக சாா்பில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பாஜக சாா்பில்,
மாவட்ட தலைவா் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி, எஸ்.டி. பிரிவு மாநில துணைத் தலைவா் விநாயகமூா்த்தி ஆகியோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல, மாவீரன் பொல்லான் பேரவை, அருந்ததியா் இளைஞா் பேரவை சாா்பில், பேரவையின் தலைவரும், அம்பேத்கா் சிலை அமைப்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான வடிவேல் ராமன் தலைமை வகித்து, அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
ஈரோடு மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சாா்பில், மாவட்ட செயலாளா் சிந்தனைச்செல்வன், அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, மாலை 3 மணி வரை பல்வேறு அமைப்பினா் அரசியல் கட்சி நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.