சென்னிமலையில் தீ தொண்டு வார விழா
சென்னிமலை தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வார விழாவில், நீத்தாா் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வார விழாவில், நீத்தாா் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பணியின்போது வீர மரணமடைந்த தீயணைப்பு அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு 7 நாள்கள் பல்வேறு விழிப்புணா்வுப் பிரசாரம், போலி ஒத்திகை பயிற்சிகள் நடைபெறும் என்று நிலைய அதிகாரி துரை தெரிவித்தாா்.