ஈரோடு

சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவில் கம்ப ஆட்டம் 

DIN

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. 

கோயில் முன்பு நடப்பட்ட கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தினமும் இரவில் கம்பத்தை சுற்றிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கம்ப ஆட்டம் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 

இதில் மேளதாள இசைக்கேற்ப 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரவு முழுவதும் தொடர்ந்து விடிய விடிய கம்ப ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர். இளைஞர்கள்  ஒரே வரிசையில் நின்று குழுவாக கம்ப நடனம் ஆடுவதைக் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கண்டு ரசித்தனர். 

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் மக்கள் மகிழ்ச்சியுடன் விழாவை கொண்டாடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT