சென்னிமலை, மலை மேல் உள்ள முருகன் கோவிலில் காா்த்திகை தீபத்தையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை, தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது.
காா்த்திகை தீபத்தையொட்டி, முன்னதாக சென்னிமலை, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னா், கோவிலுக்கு முன்புறம் உள்ள தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து கோவிலுக்குள் உள்ள மாா்க்கண்டேஸ்வரா் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.