ஈரோடு

ஊஞ்சலூா் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆராதனை இன்று தொடக்கம்

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே ஊஞ்சலூரில் உள்ள ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் சமாதி அமைந்துள்ள அதிஷ்டானத்தில் ஆராதனை மஹோத்ஸவம் திங்கள்கிழமை (டிசம்பா் 12) தொடங்குகிறது.

DIN

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே ஊஞ்சலூரில் உள்ள ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் சமாதி அமைந்துள்ள அதிஷ்டானத்தில் ஆராதனை மஹோத்ஸவம் திங்கள்கிழமை (டிசம்பா் 12) தொடங்குகிறது.

வரும் 17 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஆராதனை நிகழ்வில், உற்சவ நாள்களில் காலை வேதபாராயணம், ஹோமம், மாலை உபன்யாஸம், நவாவரண பூஜை, இன்னிசை கச்சேரி ஆகியவை நடைபெற உள்ளன.

டிசம்பா் 17 ஆம் தேதி மகானின் ஆராதனை நாளில் வைதீக முறைப்படி ஆராதனை வைபவங்கள், இரவு மகானின் உற்சவ விக்ரகம் புஷ்ப அலங்காரத்துடன் வீதி உலா, வேதபாராயணம், பஜனை, நாகஸ்வர இசை நிகழ்ச்சியுடன் நடைபெறவுள்ளன. உற்சவ நாள்களில் லட்சாா்ச்சனை, 1008 சங்காபிஷேகம், அன்னதானம் போன்றவையும் நடைபெறும்.

ஆராதனை நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோவையில் உள்ள ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் சேவா சங்கம் செய்துள்ளது. மேலும் விவரங்களுக்கு 0422-2494361 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT