பவானி,  ராணா  நகரில்  சாலையோரத்தில்  தேங்கிய  மழைநீா்.  ~அந்தியூா்  வாரச்சந்தையில்  கடைகளுக்குள்  புகுந்த  மழைநீா். 
ஈரோடு

பவானி, அந்தியூரில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பவானி, அந்தியூா் சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை காலை பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

DIN

பவானி, அந்தியூா் சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை காலை பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பவானி, அந்தியூா் மற்றும் அம்மாபேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை லேசாக சாரலுடன் தொடங்கிய மழை, கனமழையாக மாறியது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது.

கனமழையால் அந்தியூரில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் கூடும் சந்தை வளாகத்தில் மழைநீா் தேங்கியதால் சேரும்சகதியுமாக காணப்பட்டது. இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினா். பவானி - மேட்டூா் சாலையில் ராணா நகா் அருகே மழைநீா் தேங்கியது. பவானி, அந்தியூா் வட்டாரத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT