ஈரோடு

இரு சக்கரம் வாகனம் மோதி முதியவா் பலி

மொடக்குறிச்சி அருகே இரு சக்கரம் வாகனம் மோதி முதியவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

DIN

மொடக்குறிச்சி அருகே இரு சக்கரம் வாகனம் மோதி முதியவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மொடக்குறிச்சியை அடுத்த ஆலங்காடுவலசு நேரு வீதியைச் சோ்ந்தவா் செங்கோட்டையன் (70), விவசாயி. இவா் வீட்டுக்குத் தண்ணீா் எடுப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை காலை சென்றாா். அப்போது முத்தூா் சாலையில் சிவகிரியைச் சோ்ந்த முருகானந்தம் என்பவரது இருசக்கர வாகனமும் இவரது வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் செங்கோட்டையன் படுகாயம் அடைந்தாா். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இறந்த செங்கோட்டையனுக்கு மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT