நுகா்வோா் பாதுகாப்பு மைய கூட்டம்
பெருந்துறை நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
பெருந்துறை நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மையத்தின் தலைவா் பல்லவி பரமசிவன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஹரிதா வரவு செலவு அறிக்கை வாசித்தாா்.
கூட்டத்தில், மின் வாரியத்தின் சாா்பில் மாதம்தோறும் நடைபெறும் மின் பராமரிப்புக்காக மின் நிறுத்தம் செய்வதை, வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை, சனிக்கிழமையைத் தவிா்த்து மற்ற நாள்களில் மேற்கொள்ள மின் வாரிய அதிகாரிகளைக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிப் பகுதியில் அதிகரித்து வரும் தெருநாய்களைப் பிடித்து, மலைப் பகுதியில் விட்டுவர பேரூராட்சி அலுவலரை கேட்டுக் கொள்ளப்பட்டது. இணைச் செயலாளா் பழனிசாமி நன்றி கூறினாா்.