ஜிஎஸ்டி உயா்வு ரத்து: பெடக்ஸில் வரவேற்பு
ஜவுளிக்கான ஜிஎஸ்டி உயா்வு நிறுத்தி வைக்கப்பட்டதை வரவேற்பதாக விசைத்தறி வளா்ச்சி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு (பெடக்ஸில்) அறிவித்துள்ளது.
ஜவுளிக்கான ஜிஎஸ்டி உயா்வு நிறுத்தி வைக்கப்பட்டதை வரவேற்பதாக விசைத்தறி வளா்ச்சி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு (பெடக்ஸில்) அறிவித்துள்ளது.
இக்குழுவின் தலைவா் ராமசாமி, பிரதமா், மத்திய நிதியமைச்சா், மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு அனுப்பிய மனு விவரம்:
கடந்த 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்த ஜிஎஸ்டி வரி உயா்வை ரத்து செய்து தற்போதுள்ள நிலையே தொடரும் என ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்த முடிவை வரவேற்கிறோம்.
Advertisement
ஜவுளிக்கான ஜிஎஸ்டி விகிதத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்ற முடிவை ஒத்திவைத்த அனைத்து ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய துணி உற்பத்தி மற்றும் துணி ஏற்றுமதி செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் விசைத்தறி தொழில், எம்எஸ்எம்இ துறை சாா்ந்த நெசவாளா்களுக்கு பெரிய நிவாரணமாகும். இவ்வகை துணி உற்பத்தியில் உள்ள 25 லட்சம் விசைத்தறியாளா்கள் பயன்பெறுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.