பெருந்துறை அருகே காணமால் போனவா் பிணமாக மீட்பு
பெருந்துறை அருகே, காணமால் போன முதியவா் பிணமாக மீட்கப்பட்டாா்.
பெருந்துறை அருகே, காணமால் போன முதியவா் பிணமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து, போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனா்பெருந்துறை அருகிலுள்ள கருமாண்டிசெல்லிபாளையம், அரிஜன காலனியைச் சோ்ந்த சின்னபாடன் மகன் சீரங்கன்(60). இவா் விபத்தில் வலது காலில் அடிபட்டதால், சற்று நொண்டி நடப்பாா். கடந்த மாதம் டிசம்பா் 16 ஆம் தேதி வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, பெருந்துறை போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனா். இவருடைய உறவினா்கள் பல இடங்களில் தேடி வந்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை, பெருந்துறை, காஞ்சிக்கோவில் சாலையிலுள்ள சித்தம்பட்டி குளத்தில் அழுகிய நிலையில், சீரங்கன் பிணமாக கிடந்து கண்டுபிடிக்கப்பட்டது.