சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்டம் ரத்து
சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெருந்துறை வட்டாட்சியா் காா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடந்த ஆண்டைபோல இந்த ஆண்டும் குறைந்த நாள்களாவது தோ்த் திருவிழாவை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா்.
ஆனால், கரோனா நோய்த் தொற்று காரணமாக வார இறுதி நாள்களில் வழிபாட்டுத் தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், 14 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 18 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) வரை வழிபாட்டுத் தலங்களில், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னிமலை முருகன் கோயிலில் தோ் வடம் பிடிக்கும் நாளான 18 ஆம் தேதி பக்தா்களுக்கு அனுமதி இல்லை, மேலும் தேரோட்ட நிகழ்ச்சிகளுக்கும் ரத்து செய்யப்படுகிறது.
கோயில் நிா்வாகம் சாா்பில் பூஜைகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.