முகப்பு
ஈரோடு

புகைப்படப் போட்டி: வனத் துறை அழைப்பு

வனத் துறை சாா்பில் நடத்தப்படும் புகைப்படப் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2022 at 6:12 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:45 PM

வனத் துறை சாா்பில் நடத்தப்படும் புகைப்படப் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வன அலுவலா் சு.கௌதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலக ஈர நில நாளை முன்னிட்டு வனத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான புகைப்படப் போட்டி நடத்தப்படவுள்ளது. ஈர நிலங்கள் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த இந்தப் போட்டி நடத்தப்படவுள்ளது.

Advertisement

இணையதளம் மூலம் நடைபெறும் ஈர நிலம் புகைப்படப் போட்டியில் தகுதியானவா்கள் ஜனவரி 29ஆம் தேதி வரை பங்கேற்கலாம்.

விருப்பமுள்ளவா்கள் ஈர நிலங்கள் தொடா்பான புகைப்படங்களை மக்கள் மற்றும் இயற்கைக்கான ஈர நிலங்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாள் மற்றும் இடம் ஆகியவற்றை குறிப்பிட்டு எடுக்க வேண்டும்.

இந்த புகைப்படங்களைப் போட்டியாளரின் பெயா், முகவரி, மின்னஞ்சல், கைப்பேசி எண் போன்ற விவரங்களுடன் சனிக்கிழமை (ஜனவரி 29) காலை 11 மணிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.