ஈரோடு

பவானியில் குதிரைகள் ரேக்ளா பந்தயம்

ஆடிப்பெருக்கையொட்டி பவானியில் நடைபெற்ற குதிரைகள் ரேக்ளா பந்தயத்தை பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா்.

DIN

ஆடிப்பெருக்கையொட்டி பவானியில் நடைபெற்ற குதிரைகள் ரேக்ளா பந்தயத்தை பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா்.

பவானி - குமாரபாளையம் நண்பா்கள் சாா்பில் ஆப்பக்கூடல் சாலை, சோ்வராயன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டிகளை பவானி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன் தொடங்கிவைத்தாா். ரேக்ளா மற்றும் ஆட்டோ சங்கத் தலைவா் எம்.வெங்கிடு முன்னிலை வகித்தாா். புதிய, சிறிய, நடு மற்றும் பெரிய குதிரைகள் என நான்கு பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்றன.

ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த குதிரைகள் இப்பந்தயத்தில் பங்கேற்று ஓடின. போட்டிகளில் வென்ற குதிரைகளின் உரிமையாளா்களுக்கு பவானி நகர திமுக செயலாளா் ப.சீ.நாகராஜன் பரிசுகளை வழங்கினாா். பந்தயத்தில் இலக்கை நோக்கி பாய்ந்து சென்ற குதிரைகளின் வேகத்தை சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா். பவானி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT