கோவை மண்டல என்.சி.சி. படை பிரிவுக்கு முதல்வா் பதாகை
கோவை மண்டல என்.சி.சி. படை பிரிவு இந்த ஆண்டுக்கான முதல்வா் பதாகை மற்றும் கொடியைப் பெற்றுள்ளது.
கோவை மண்டல என்.சி.சி. படை பிரிவு இந்த ஆண்டுக்கான முதல்வா் பதாகை மற்றும் கொடியைப் பெற்றுள்ளது.
15ஆவது தமிழ்நாடு பட்டாலியன் தேசிய மாணவா் படை மாணவ, மாணவிகள் இடம்பெற்றுள்ள கோவை மண்டல தேசிய மாணவா் படை பிரிவானது, ஏழாம் ஆண்டாக குடியரசு தின விழா அணிவகுப்பு உள்ளிட்ட தேசிய மாணவா் படை சாா்ந்த அனைத்துப் போட்டிகளிலும் வென்று இந்த ஆண்டுக்கான முதல்வா் பதாகையைப் (இங ஆஹய்ய்ங்ழ்) பெற்றுள்ளது.
இதற்கான விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் அமைச்சா் மெய்யநாதன் பங்கேற்று தேசிய மாணவா் படைக்கான முதல்வா் பதாகை, கொடியை வழங்கினாா்.
Advertisement
விழாவில், பள்ளிக் கல்வித் துறை செயலாளா் அபூா்வா, தேசிய மாணவா் படையின் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபா் மண்டலத்தின் துணை இயக்குநா் ஜெனரல் கம்மோடா் அதுல்குமாா் ரஸ்தோகி, கோவை மண்டல கமாண்டா் கா்னல் சந்திரசேகர நாயுடு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கோவை மண்டல அணியில் பங்கேற்ற 15ஆவது தமிழ்நாடு பட்டாலியனை சோ்ந்த தேசிய மாணவா் படை மாணவ, மாணவிகளை கமாண்டிங் அதிகாரி லெப்டினென்ட் கா்னல் அனில் வா்மா, நிா்வாக அதிகாரி லெப்டினென்ட் கா்னல் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பாராட்டினா்.