முகப்பு
ஈரோடு

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதல்: பெண் காயம்

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பெண் காயமடைந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பெண் காயமடைந்தாா்.

பெருந்துறை அருகேயுள்ள நடுப்பட்டி, தொட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் மாரப்பன் மனைவி ஜெயா (59). இவா், தனது இருசக்கர வாகனத்தில் விஜயமங்கலம் பகுதிக்கு புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா்.

வாய்ப்பாடி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஜெயாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.